செய்திகள்
தேவாலா போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு இலவச முககவசம் வினியோகம்
தேவாலா போலீசார் சார்பில் பந்தலூர் பஜாரில் பொதுமக்களுக்கு இலவச முககவசம் வழங்கப்பட்டது.
பந்தலூர்:
தேவாலா போலீசார் சார்பில் பந்தலூர் பஜாரில் பொதுமக்களுக்கு இலவச முககவசம் வழங்கப்பட்டது. இதற்கு துணை சூப்பிரண்டு அமீர் அகமது தலைமை தாங்கினார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி பேசும்போது, கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த அனைவரும் முககவசம் அணிய வேண்டும். சமுக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதை மீறினால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் இன்ஸ்பெக்டர்கள் திருஞானசம்பந்தம், பிரபாகரன் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்