செய்திகள்
முககவசம்

தேவாலா போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு இலவச முககவசம் வினியோகம்

Published On 2021-04-24 17:51 IST   |   Update On 2021-04-24 17:51:00 IST
தேவாலா போலீசார் சார்பில் பந்தலூர் பஜாரில் பொதுமக்களுக்கு இலவச முககவசம் வழங்கப்பட்டது.
பந்தலூர்:

தேவாலா போலீசார் சார்பில் பந்தலூர் பஜாரில் பொதுமக்களுக்கு இலவச முககவசம் வழங்கப்பட்டது. இதற்கு துணை சூப்பிரண்டு அமீர் அகமது தலைமை தாங்கினார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி பேசும்போது, கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த அனைவரும் முககவசம் அணிய வேண்டும். சமுக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதை மீறினால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் இன்ஸ்பெக்டர்கள் திருஞானசம்பந்தம், பிரபாகரன் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்

Similar News