செய்திகள்
ஊட்டியில் ஊழியருக்கு தொற்று ஏற்பட்டதால் வங்கி மூடல்
வங்கியில் மற்ற ஊழியர்கள் மற்றும் பணம் செலுத்துவது போன்றவற்றுக்காக வந்து சென்ற வாடிக்கையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
ஊட்டி:
ஊட்டி கமர்சியல் சாலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது. இங்கு பணிபுரிந்து வரும் ஊழியருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதன் முடிவில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் தடுப்பு நடவடிக்கையாக வங்கி மூடப்பட்டது. நகராட்சி ஊழியர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து கிருமிநாசினி தெளித்து சுகாதார பணியில் ஈடுபட்டனர். வங்கியில் மற்ற ஊழியர்கள் மற்றும் பணம் செலுத்துவது போன்றவற்றுக்காக வந்து சென்ற வாடிக்கையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. இதனால் சக ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.