செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

நீலகிரி மாவட்டத்தில் 3 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2021-04-19 10:24 GMT   |   Update On 2021-04-19 10:24 GMT
நீலகிரி மாவட்டத்தில் தற்போது தினமும் 1,200 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா பரவுவதை தடுக்க பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிராமப்புறங்கள், வெளியிடங்களுக்கு சென்று திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நடமாடும் மருத்துவ குழுவினர் கிராமப்புறங்களுக்கு சென்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தி வருகின்றனர்.

இதில் உடலில் அதிக வெப்பநிலை இருப்பது தெரிய வந்தால், சம்பந்தப் பட்ட நபர்களை கொரோனா பரிசோதனைக்காக பரிந்துரைக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 94 ஆயிரம் பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

தற்போது தினமும் 1,200 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News