செய்திகள்
கோப்புப்படம்

வேலூர் மாவட்டத்தில் மேலும் 192 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-04-19 08:15 IST   |   Update On 2021-04-19 08:15:00 IST
வேலூர் மாவட்டத்தில் 809 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 195 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய பரிசோதனை முடிவில் மேலும் 192 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதில், 100-க்கும் மேற்பட்டோர் வேலூர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். வேலூரில் தங்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பிறமாநிலங்களை சேர்ந்த 20 பேரும் பாதிக்கப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் 809 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News