செய்திகள்
கோப்புபடம்

விக்கிரமங்கலம் அருகே கர்ப்பிணி மர்ம மரணம் - கொலையா? போலீசார் விசாரணை

Published On 2021-04-16 11:50 GMT   |   Update On 2021-04-16 11:50 GMT
விக்கிரமங்கலம் அருகே கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கீழநத்தம் கிராமத்தில் உள்ள மேலத்தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 33). இவரது மனைவி இந்துமதி(24). இவர்கள் இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, 2½ வயதில் மித்திரன் என்ற மகன் உள்ளான். மேலும் தற்போது இந்துமதி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்துமதிக்கும், பிரபாகரனுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டில் மர்மமான முறையில் கீழ நத்தத்தில் உள்ள வீட்டில் பிணமாக தூக்கில் தொங்கினார்.

இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், இந்துமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் இந்துமதியின் தந்தை ராஜேந்திரன் கொடுத்த புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இந்துமதி எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் அமர்நாத் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News