செய்திகள்
கோப்புபடம்

அரியலூர் அருகே ரெயிலில் அடிபட்டு பெண் பலி

Published On 2021-04-14 20:10 IST   |   Update On 2021-04-14 20:10:00 IST
அரியலூர் அருகே ரெயிலில் அடிபட்டு பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:

அரியலூர் அருகே உள்ள சில்லக்குடி- கல்லகம் ெரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் ெரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அந்த பெண்ணுக்கு சுமார் 45 வயது இருக்கலாம். சேலை அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இது பற்றி அருகில் உள்ள கிராமத்தில் விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ெதாடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News