செய்திகள்
கோப்புப்படம்

வேலூர் ஜெயிலில் 50 கைதிகள் ரம்ஜான் நோன்பு

Published On 2021-04-14 09:02 GMT   |   Update On 2021-04-14 09:02 GMT
வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள 50 கைதிகள் ரம்ஜான் நோன்பு தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இதையடுத்து அவர்களுக்கு நோன்பு இருக்க சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது.
வேலூர்:

ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம். 29-ம் நாளில் வானில் தோன்றும் பிறையை வைத்து ரம்ஜான் நோன்பு தொடங்கப்படும்.

அவ்வாறு பிறை தென்படாத சூழலில் மறுநாள் முதல் நோன்பை தொடங்குவர். இந்தாண்டு ரம்ஜான் நோன்பு இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெறுகிறது.

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள 50 கைதிகள் ரம்ஜான் நோன்பு தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இதையடுத்து அவர்களுக்கு நோன்பு இருக்க சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது.

இதையடுத்து, இன்று முதல் 50 கைதிகள் ரம்ஜான் நோன்பை தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு அதிகாலை 5 மணிக்கு உணவும், மாலை 6 மணிக்கு மேல் உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News