செய்திகள்
கைது

ஆண்டிமடம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது

Published On 2021-04-12 17:55 IST   |   Update On 2021-04-12 17:55:00 IST
ஆண்டிமடம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பெரியகருக்கை கிராமம் பாலம் அருகே டிராக்டர் டிப்பரில் ஒருவர் ஆற்று மணலை ஏற்றிக்கொண்டிருந்ததை கண்ட ஆத்துக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன், ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் மணல் ஏற்றிக் கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் பெரிய கருக்கை கிராமத்தை சேர்ந்த செந்தில்ராஜா(வயது 25) என்பதும், அனுமதியின்றி மணல் அள்ளியதும் தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து, செந்தில்ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News