செய்திகள்
விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதை படத்தில் காணலாம்.

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு மாவட்ட எல்லையில் கொரோனா பரிசோதனை

Published On 2021-04-11 02:29 GMT   |   Update On 2021-04-11 02:29 GMT
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமில்லை.
காட்பாடி:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமில்லை. இதனை தவிர மற்ற வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, சேர்க்காடு மற்றும் ஆந்திர எல்லையோர சோதனைச் சாவடியில் போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் நேற்று காலை முதல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து இ-பாஸ் அனுமதி பெற்று வரும் வாகனங்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறது.

வேலூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர், திருப்பதி இடையே வழக்கம் போல பஸ் போக்குவரத்து இயக்கப்படுகிறது. ஆந்திர மாநில வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

ஆந்திராவில் இருந்து வருபவர்களுக்கு மாவட்ட எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் சுகாதாரத்துறையினர் தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்கின்றனர். எங்கிருந்து வருகிறார்கள் என முகவரி பதிவு செய்யப்படுகிறது. அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அனைவருக்கும் கிறிஸ்டியான்பேட்டையில் கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் எடுக்கப்பட்டது.

பஸ்களில் பயணம் செய்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்காக சளி மாதிரி எடுக்கப்பட்டன. அவர்களுடைய முழு விபரமும் சேகரிக்கப்படுகின்றன.

மேலும் முக கவசம் அணியாதவர்களுக்கு போலீசார் ரூ.200 அபராதம் விதித்தனர்
Tags:    

Similar News