செய்திகள்
சிதம்பரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரிடம் பணம் பறிப்பு- வாலிபர் கைது
பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரிடம் பணம் பறித்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிதம்பரம்:
சிதம்பரம் ஆரணியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரபிரபு (வயது 36). பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயலாளரான இவர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதி வேட்பாளராகவும் போட்டியிட்டார். நேற்று முன்தினம் இரவு இவர் சிதம்பரம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த சிதம்பரம் சகஜானந்தா தெருவை சேர்ந்த வெற்றிச்செல்வன்(30) என்பவர், திடீரென சந்திரபிரபுவின் சட்டை பையில் இருந்த பணத்தை பறித்தார். பின்னர் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றிச்செல்வனை கைது செய்தனர்.