செய்திகள்
விபத்து பலி

அரியலூர் அருகே லாரி மோதி தொழிலாளி பலி

Published On 2021-04-10 18:26 IST   |   Update On 2021-04-10 18:26:00 IST
அரியலூர் அருகே லாரி மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(வயது 51). கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு சைக்கிளில் சென்றபோது எதிரே வந்த லாரி மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News