செய்திகள்
விபத்து

வடலூர் அருகே அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

Published On 2021-04-10 11:31 GMT   |   Update On 2021-04-10 11:31 GMT
வடலூர் அருகே மொபட் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வடலூர்:

வடலூர் அருகே உள்ள சேராக்குப்பம் சின்ன காலனி என்கிற ரோட்டு மருவாய் பகுதியை சேர்ந்தவர் பால்சாமி மகன் கணேசன் (வயது 54). தொழிலாளி. இவர் நேற்று வடலூர் சேத்தியாத்தோப்பு சாலையில் மொபட்டில் மருவாய் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த அரசு பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News