செய்திகள்
கோப்புபடம்

வேப்பூர் அருகே காயங்களுடன் வாலிபர் பிணம்: கொலையா ? போலீசார் விசாரணை

Published On 2021-04-02 11:06 GMT   |   Update On 2021-04-02 11:06 GMT
வேப்பூர் அருகே ரத்த காயங்களுடன் வாலிபர் பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் அடித்து கொலை செய்தார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பூர்:

வேப்பூர் அருகே கழுதூர் புறவழிச்சாலையோரமாக 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் காயங்களுடன் அழுகிய நிலையில் நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர்.

இருப்பினும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் ?, அவரை யாரேனும் அடித்து கொலை செய்து சாலையோரத்தில் வீசி விட்டு சென்றார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News