செய்திகள்
பணம் பறிமுதல்

நீலகிரியில் வாகன சோதனையில் ரூ.5 லட்சம் பறிமுதல்

Published On 2021-03-29 16:47 IST   |   Update On 2021-03-29 16:49:00 IST
நீலகிரியில் இதுவரை ரூ.2 கோடியே 6 லட்சத்து 15 ஆயிரத்து 390 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் நேற்று பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை செய்தனர். ஊட்டி சட்டமன்ற தொகுதியில் ரூ.54 ஆயிரம், கூடலூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.57 ஆயிரம், குன்னூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.3 லட்சத்து 99 ஆயிரத்து 900 என மொத்தம் ரூ.5 லட்சத்து 10 ஆயிரத்து 900 உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

உடனடியாக இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நீலகிரியில் இதுவரை ரூ.2 கோடியே 6 லட்சத்து 15 ஆயிரத்து 390 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

Similar News