செய்திகள்
கைது

சேத்தியாத்தோப்பு அருகே சிறுமியை கடத்திய வாலிபர் கைது

Published On 2021-03-28 13:15 GMT   |   Update On 2021-03-28 13:15 GMT
சேத்தியாத்தோப்பு அருகே 17 வயது சிறுமியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேத்தியாத்தோப்பு:

சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் மிராலூர் பஸ் நிறுத்தம் அருகில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர், சிறுமியுடன் நின்று கொண்டிருந்தார். இவர்களை பார்த்ததும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உடனடியாக அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பரங்கிப்பேட்டையை சேர்ந்த சங்கர் மகன் வீரமணி(வயது 24) என்பதும், சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமியை அவர் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து வீரமணியை போலீசார் கைது செய்தனர். சிறுமி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
Tags:    

Similar News