செய்திகள்
சாலை மறியல்

பந்தலூரில் யானை தாக்கி 2 பேர் பலி: வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2021-03-26 15:39 IST   |   Update On 2021-03-26 15:39:00 IST
சமீபத்தில் பிறந்த குட்டியுடன் யானைக் கூட்டம் கடந்த 3 நாட்களாக நடமாடுவதை தெரிவித்தும் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம், பந்தலூர் ஏலமண்ணா ஆதிவாசி காலனியைச் சேர்ந்த சடையன் (வயது52), பெருங்கரையை பகுதியைச் சேர்ந்த முத்துசாமி( 63) ஆகியோர் வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பியபோது காட்டு யானைகள் அவர்களை தாக்கி கொன்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் அங்கு சென்றனர்.

சமீபத்தில் பிறந்த குட்டியுடன் யானைக் கூட்டம் கடந்த 3 நாட்களாக நடமாடுவதை தெரிவித்தும் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர்.

கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம், கூடலூர் டி.எஸ்.பி. ஜெய்சிங், பந்தலூர் டி.எஸ்.பி. அமீர் அகமது, அதிகாரிகள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் யானைகளை விரட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Similar News