செய்திகள்
புவனகிரி தொகுதி அமமுக வேட்பாளர் பாலமுருகன் குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரிப்பு
புவனகிரி தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கே.எஸ்.கே. பாலமுருகன் தனது கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சேத்தியாத்தோப்பு:
புவனகிரி தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கே.எஸ்.கே. பாலமுருகன் தனது கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அவர், நேற்று புவனகிரி தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டான், மருதூர், எல்லைகுடி, குமுடிமுளை, சொக்கன் கொல்லை, சாத்தப்பாடி, மேலமணக்குடி, பூவராகன் பேட்டை, வடக்கு திட்டை, தெற்கு திட்டை, ஆலம்பாடி, கிருஷ்ணாபுரம், நத்தமேடு, சித்தேரி, கொளக்குடி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று குக்கர் சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தார்.
அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், இளைஞர்கள் பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் அறிவழகன், ஜெயலலிதா பேரவை செயலாளர் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் ராமதாஸ், மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜா, புவனகிரி நகர செயலாளர் பிலால் .ரா.பே. காசி, சிறுபான்மை பிரிவு செயலாளர் சையத் பிலால், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் கே.ஆர். வினோத், தொகுதி பொறுப்பாளர் பானு சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.