செய்திகள்
தற்கொலை

பாரூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2021-03-23 17:55 IST   |   Update On 2021-03-23 17:55:00 IST
பாரூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:

போச்சம்பள்ளி அருகே உள்ள மொல்லம்பட்டியை சேர்ந்தவர் பலனேசன் (வயது 50). விவசாயி. இவர் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பலனேசன் இறந்தார். இது குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News