செய்திகள்
கோப்பு படம்.

சிதம்பரத்தில் ஜவுளி வியாபாரி மர்ம மரணம்

Published On 2021-03-22 18:31 IST   |   Update On 2021-03-22 18:31:00 IST
சிதம்பரத்தில் தங்கும் விடுதியில் ஜவுளி வியாபாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:

உத்தர பிரதேச மாநிலம் அஸ்லாம் நகரை சேர்ந்தவர் முகமதுதசின்கான் (வயது 55). இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கி, ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். நேற்று காலை முகமதுதசின்கான் தங்கும் விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, முகமதுதசின்கான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, முகமதுதசின்கான் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News