செய்திகள்
விபத்து பலி

பேரிகை அருகே விபத்தில் விவசாயி பலி

Published On 2021-03-22 08:02 IST   |   Update On 2021-03-22 08:02:00 IST
பேரிகை அருகே விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

பேரிகை அருகே உள்ள கே.என்.தொட்டியை சேர்ந்தவர் நாராயணப்பா (வயது 59). விவசாயி. சம்பவத்தன்று அவர் சைக்கிளில் பேரிகை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நாராயணப்பா பரிதாபமாக இறந்தார். இது குறித்து பேரிகை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News