செய்திகள்
வேப்பனப்பள்ளி அருகே கல்லூரி பேராசிரியைக்கு கொரோனா தொற்று
கல்லூரி பேராசிரியையின் கணவர் வி.மாதேப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருவதால் அங்குள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே வி. மாதேப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றும் வரும் ஆசிரியரின் மனைவி தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரது கணவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் வி.மாதேப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருவதால் அங்குள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்னும் ஒரிரு நாட்களில் தெரியவரும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே வி. மாதேப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றும் வரும் ஆசிரியரின் மனைவி தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரது கணவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் வி.மாதேப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருவதால் அங்குள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்னும் ஒரிரு நாட்களில் தெரியவரும்.