செய்திகள்
கலசப்பாக்கம் அருகே கல்லால் தாக்கி வாலிபர் கொலை
கலசப்பாக்கம் அருகே வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
கலசப்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேலாரணியில் இருந்து கீழ் தாங்களல் செல்லும் வழியில் வாலிபர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் கலசப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தகவலறிந்த எஸ்.பி. அரவிந்த் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
முதற்கட்ட விசாரணையில் கொலையான நபர் கீழ்தாங்கல் கிராமத்தை சேர்ந்த பர்வதம் மகன் பிரகாஷ் (வயது 28) என்று தெரியவந்தது. இவரை கொடூரமாக கொலை செய்தது யார்? எதற்காக கொல்லப்பட்டார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு கலசப்பாக்கம் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆண் ஒருவர் கொன்று புதைக்கப்பட்டதும்,சொர குளத்தூர் காப்புக்காட்டில் பெண் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததும் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த 2 கொலைக்கான காரணங்களையும் அது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் இதுவரை பிடிக்கவில்லை.
இந்த நிலையில் 3-வது சம்பவமாக வாலிபர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேலாரணியில் இருந்து கீழ் தாங்களல் செல்லும் வழியில் வாலிபர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் கலசப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தகவலறிந்த எஸ்.பி. அரவிந்த் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
முதற்கட்ட விசாரணையில் கொலையான நபர் கீழ்தாங்கல் கிராமத்தை சேர்ந்த பர்வதம் மகன் பிரகாஷ் (வயது 28) என்று தெரியவந்தது. இவரை கொடூரமாக கொலை செய்தது யார்? எதற்காக கொல்லப்பட்டார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு கலசப்பாக்கம் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆண் ஒருவர் கொன்று புதைக்கப்பட்டதும்,சொர குளத்தூர் காப்புக்காட்டில் பெண் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததும் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த 2 கொலைக்கான காரணங்களையும் அது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் இதுவரை பிடிக்கவில்லை.
இந்த நிலையில் 3-வது சம்பவமாக வாலிபர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.