செய்திகள்
விபத்து பலி

ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த வாலிபர் பலி

Published On 2021-03-15 11:45 IST   |   Update On 2021-03-15 11:45:00 IST
ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்:

ஆலங்குடி அருகே உள்ள மேலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 21). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவராத்திரி விழாவையொட்டி நெடுங்குடி கைலாசநாதர் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு மேல்நிலைப்பட்டி அரிமளம் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற ஒணாங்குடி கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர் மீது மோதி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News