செய்திகள்
விபத்து பலி

மத்தூர் அருகே விபத்தில் டீ மாஸ்டர் பலி

Published On 2021-03-12 17:43 IST   |   Update On 2021-03-12 17:43:00 IST
மத்தூர் அருகே விபத்தில் டீ மாஸ்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:

மத்தூர் அருகே உள்ள சூரங்கொட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாதப்பன் (வயது 30). டீ மாஸ்டர். சம்பவத்தன்று இவர் தனது மொட்டில் பொம்மை பள்ளியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஜிஞ்சம்பட்டி கூட்டுரோடு அருகே சென்றபோது எதிரே வந்த கோழி லோடு ஏற்றிய மினி லாரி மாதப்பன் ஓட்டிச்சென்ற மெபாட் மீது பயங்கரமாக மோதியது. இதில் உடல் நசுங்கி உயிருக்கு போராடிய மாதவனை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள், மாதப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான மாதப்பனுக்கு மாதேஸ்வரி என்ற மனைவியும், மோகன ரூபன் என்ற மகனும், தாரிகா, கீர்த்தனா என்ற 2 மகள்களும் உள்ளனர்.

Similar News