செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்து 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 507 ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் நேற்று புதிதாக 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 690 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா சிகிச்சையில் இருந்து 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 507 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 157 ஆக உள்ளது.