செய்திகள்
கோப்பு படம்.

வேட்டவலம் அருகே ஏரியில் பிணமாக கிடந்த கூலித்தொழிலாளி

Published On 2021-03-11 18:13 IST   |   Update On 2021-03-11 18:13:00 IST
வேட்டவலம் அருகே கூலித்தொழிலாளி ஏரியில் பிணமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேட்டவலம்:

வேட்டவலத்தை அடுத்த ராஜாபாளையம் கிராமத்தில் உள்ள ஏரியில் ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் வேட்டவலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் நிலவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

பிணமாக கிடந்த அவர், அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளியான ரமேஷ் (வயது 48) எனத் தெரியவந்தது. அவர் 8-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் வீட்டில் இருந்து டீக்குடிக்க கடைக்குச் சென்றார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை. கடந்த 3 நாட்களாக பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

பொதுமக்கள் தெரிவித்த தகவலின் பேரில் ஏரியில் கிடந்த கூலித்தொழிலாளியின் பிணத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அவரின் பிணத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News