செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போலீசார் சிகரலப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற சதன் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.