செய்திகள்
ஓசூரில் வாகனம் மோதி லாரி டிரைவர் பலி
ஓசூரில் வாகனம் மோதி லாரி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
தர்மபுரி மாவட்டம் குரும்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனிவேல் (வயது 25). லாரி டிரைவர். இவர் ஓசூர் அருகே ஒன்னல்வாடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில், பலத்த காயம் அடைந்த முனிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.