செய்திகள்
கீழ்பென்னாத்தூர் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை
கீழ்பென்னாத்தூர் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கரிக்கலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பராயன் (வயது 70). உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இந்த நிலையில், சம்பவத்தன்று விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.
உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.