செய்திகள்
குருவிநாயனப்பள்ளி சோதனைச்சாவடியில் ஆய்வு செய்த கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி

ஆந்திர மாநில எல்லையோர சோதனைச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு

Published On 2021-03-06 16:24 IST   |   Update On 2021-03-06 16:24:00 IST
ஆந்திர மாநில எல்லையோர சோதனைச்சாவடிகளில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஆந்திர மாநில எல்லையான குருவிநாயனப்பள்ளி, வேப்பனப்பள்ளி தொகுதிக்கு உட்பட்ட அரியனப்பள்ளி சோதனைச்சாவடிகளில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையையொட்டி, ஆந்திரா, கர்நாடக மாநில எல்லையோரங்களில் 11 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு போலீசார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேப்பனப்பள்ளி தொகுதிக்குட்பட்ட ஆந்திர மாநில எல்லை,, கர்நாடக எல்லையான நேரலகிரி, ஓசூர் தொகுதிக்குட்பட்ட மத்திகிரி, கொத்தகொண்டப்பள்ளி டி.வி.எஸ்., பூனப்பள்ளி, கர்னூர், பாகலூர், கக்கனூர் ஆகிய இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் பர்கூர் தொகுதிக்குட்பட்ட ஆந்திர மாநில எல்லையான வரமலகுண்டா, குருவிநாயனப்பள்ளி, தளி தொகுதிக்குட்பட்ட கர்நாடக மாநில எல்லையான கும்ளாபுரம் மற்றும் கெம்பட்டி ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சோதனைச்சாவடிகளில் வாகனங்கள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மது கடத்தலை தடுக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News