செய்திகள்
கைது

களம்பூர் அருகே மணல் கடத்திய 5 பேர் கைது

Published On 2021-03-05 09:58 GMT   |   Update On 2021-03-05 09:58 GMT
களம்பூர் அருகே மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:

களம்பூரை அடுத்த சதுப்பேரி கிராமத்தில் மண் மற்றும் மொரம்பு மண் கடத்தியதாக சதுப்பேரி கிராமத்தை சேர்ந்த கார்த்தி (வயது 35), புகழேந்தி (23), மனோகரன் (28), பரத் (23), பழனி (40) ஆகிய 5 பேரை களம்பூர் போலீசார் கைது செய்தனர்.

மேலும் 5 டிராக்டர்கள் மற்றும் ஒரு பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News