செய்திகள்
தற்கொலை

கீரனூர் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2021-03-02 11:57 GMT   |   Update On 2021-03-02 11:57 GMT
கீரனூர் அருகே குடிப்பதை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கீரனூர்:

கீரனூரை அடுத்த தென்னத்திரையன் பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 40). கூலித்தொழிலாளியான இவருக்கு மது அருந்து பழக்கம் இருந்து வந்தது. தொடர்ந்து மது அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஆனாலும் அவர் தொடர்ந்து மது அருந்தி வந்ததாக தெரிகிறது. இதை அவரது மனைவி இளஞ்சியம் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பழனிச்சாமி மதுவுடன் பூச்சி மருந்தை கலந்து குடித்து மயங்கி கிடந்தார். 

இதை கண்ட அப்பகுதியினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News