செய்திகள்
கோப்பு படம்.

வேலூரில் கழிவுநீர் கால்வாயில் விழுந்த முதியவர் மரணம்

Published On 2021-03-01 13:11 GMT   |   Update On 2021-03-01 13:11 GMT
வேலூரில் நடந்து சென்ற முதியவர் கழிவுநீர் கால்வாயில் விழுந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் போது பரிதாபமாக இறந்தார்.
வேலூர்:

வேலூர் கஸ்பா வசந்தபுரத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 60), தொழிலாளி. இவர் நேற்று இரவு 9 மணியளவில் இருளாக இருந்த இடத்தில் நடந்து சென்றபோது கழிவுநீர் கால்வாயில் விழுந்து விட்டார்.

இதைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வேலூர் தெற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதற்குள் கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கி சங்கரை பொதுமக்கள் மீட்டு, வெளியே கொண்டு வந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது சங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சங்கர் நடந்து செல்லும்போது கால்வாயில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது மதுபோதையில் விழுந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News