செய்திகள்
கைது

கறம்பக்குடி அருகே மதுவிற்ற 2 பேர் கைது

Published On 2021-02-28 14:35 GMT   |   Update On 2021-02-28 14:35 GMT
கறம்பக்குடி அருகே மதுவிற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:

கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் கறம்பக்குடி, முள்ளங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த பாண்டியன், சரவணன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News