செய்திகள்
சேத்துப்பட்டு அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி
சேத்துப்பட்டு அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு அருகே பூங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 40), கூலி தொழிலாளி. இவர் பூங்குணம் கிராமத்தில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டு சென்றுவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தேசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் நசுருதீன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேத்துப்பட்டு அருகே பூங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 40), கூலி தொழிலாளி. இவர் பூங்குணம் கிராமத்தில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டு சென்றுவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தேசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் நசுருதீன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.