செய்திகள்
கோப்புபடம்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே 3-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

Published On 2021-02-25 15:30 GMT   |   Update On 2021-02-25 15:30 GMT
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. 3-வது நாளாக போராட்டம் நடந்தது.
வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. 3-வது நாளாக நேற்றும் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அமிர்தவள்ளி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பரசுராமன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்குவேன் என அறிவித்ததை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். அகவிலை உடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் முறையான குடும்ப ஓய்வூதியத்தை அறிவித்திட வேண்டும் என்பது உள்பட பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News