செய்திகள்
மின்தடை

செவல்பட்டியில் நாளை மின்தடை

Published On 2021-02-15 17:36 GMT   |   Update On 2021-02-15 17:36 GMT
செவல்பட்டியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
சிவகாசி:

சிவகாசி மின்வாரிய அதிகாரி முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிவகாசி அருகே உள்ள செவல்பட்டி, வெம்பக்கோட்டை ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் செவல்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, மூர்த்திநாயக்கன்பட்டி, குகன்பாறை, இனாம்மீனாட்சிபுரம், சக்கம்மாள்புரம், அம்மையார்பட்டி, துலுக்கன்குறிச்சி, வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைப்பட்டி, சல்வார்பட்டி, கே.மடத்துப்பட்டி, தாயில்பட்டி, விஜயகரிசல்குளம், பனையடிப்பட்டி, சங்கரபாண்டியபுரம் ஆகிய பகுதியில் மின்வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News