செய்திகள்
விபத்து பலி

ஆலடிபட்டி அருகே விபத்தில் முதியவர் பலி

Published On 2021-02-15 09:01 IST   |   Update On 2021-02-15 09:01:00 IST
ஆலடிபட்டி அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 70), நாராயணன் (64). இவர்கள் இருவரும் சமையல் வேலைக்காக அருப்புக்கோட்டை அருகே ஆலடிபட்டி செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் கல்குறிச்சி மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பாஸ்கரன் மற்றும் நாராயணன் தூக்கி வீசப்பட்டனர். நாராயணன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடல் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பாஸ்கரன் படுகாயத்துடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News