செய்திகள்
மரணம்

திருவண்ணாமலை அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

Published On 2021-02-14 10:06 IST   |   Update On 2021-02-14 10:06:00 IST
திருவண்ணாமலை அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை தாலுகா கிளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன். அவரது மகன் தனுஷ் (வயது 17). இவர், தென்னை மரத்தில் ஏறியபோது, தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News