செய்திகள்
கைது

ஆரணி அருகே மணல் கடத்திய 2 பேர் கைது

Published On 2021-02-12 09:05 GMT   |   Update On 2021-02-12 09:05 GMT
ஆரணி அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:

ஆரணியை அடுத்த தச்சூர் மோட்டூர் ஆற்றுப்படுகை பகுதியில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தரணி மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தச்சூர் - மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி (வயது 40), கோபி (30) ஆகிய 2 பேர் 2 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தனர். இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News