செய்திகள்
கலசபாக்கம் அருகே போலி டாக்டர் கைது
கலசபாக்கம் அருகே போலி டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலசபாக்கம்:
கலசபாக்கம் அருகே உள்ள லாடவரம் கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவர் முறையான மருத்துவ படிப்பு படிக்காமல் கடந்த சில வருடங்களாக அதே கிராமத்தில் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த கலசபக்கம் சுகாதாரத்துறை அதிகாரிகள் போலி டாக்டர் அருள் மீது கலசபாக்கம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் அருளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.