செய்திகள்
தற்கொலை

ஆரணி அருகே விஷம் குடித்து மாற்றுத்திறனாளி தற்கொலை

Published On 2021-02-10 14:41 GMT   |   Update On 2021-02-10 14:41 GMT
ஆரணி அருகே விஷம் குடித்து மாற்றுத்திறனாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:

ஆரணியை அடுத்த ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45), மாற்றுத்திறனாளி. இவருக்கு செந்தாமரை என்ற அக்காவும், ஆறுமுகம் என்ற தம்பியும் உள்ளனர். மூவருக்கும் சொந்தமான சுமார் 2½ ஏக்கர் நிலம் உள்ளது. நிலம் பாகப்பிரிவினை சம்பந்தமாக செந்தாமரையின் கணவர் அன்பழகன் சுப்பிரமணியமும், தம்பி ஆறுமுகமும் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுப்பிரமணி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News