செய்திகள்
தற்கொலை

கண்ணமங்கலம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2021-01-30 10:36 GMT   |   Update On 2021-01-30 10:36 GMT
கண்ணமங்கலம் அருகே உடம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு வீரகோயில் கோட்டை மலை செல்லும் சாலையில் வசிக்கும் விவசாயி சரவணன். இவரின் மனைவி சகுந்தலா (வயது 28). அவர்களுக்கு ஓவியா (9), தேவிஸ்ரீ (7) என்ற இரு மகள்களும், திவ்யதர்ஷன் (4), பிரவேஷ் (2) என்ற இரு மகன்களும் உள்ளனர்.

சகுந்தலா உடல் நலம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை. 26-ந்தேதி மீண்டும் உடல் நலம் பாதிக்கப்படவே பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டு வீட்டில் மயக்கமடைந்து கிடந்தார்.

அவரை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை சகுந்தலா உயிரிழந்தார். சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News