செய்திகள்
தற்கொலை

டேங்க் ஆபரேட்டர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-01-26 09:31 GMT   |   Update On 2021-01-26 09:31 GMT
டேங்க் ஆபரேட்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள கொங்கராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 40). அதே ஊராட்சியில் குடிநீர் டேங்க் ஆபரேட்டராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் கடந்த 22-ந் தேதி தனது மனைவி வடிவுக்கரசியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் பணம் கொடுக்க மறுத்துவிட்ட வடிவுக்கரசி, பால்கறப்பதற்காக வெளியே வந்துவிட்டார். மாட்டில் பால் கறந்துவிட்டு சிறிது நேரம் கழித்து உள்ளே சென்றபோது முரளி தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசில் வடிவுக்கரசி புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News