செய்திகள்
குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி பலி
குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை தாமரைக்குளம் தென்கரை பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மகன் அருண்குமார்(வயது 25).தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக, நிரம்பி இருந்த தாமரைக்குளத்தில் அருண்குமார் அவரது நண்பர்களோடு நேற்று தூண்டில் போட்டு மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி குளத்தில் விழுந்து மூழ்கினார். தகவல் அறிந்த நாகை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குளத்தில் இறங்கி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் அருண்குமார் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.