செய்திகள்
கோப்பு படம்.

திருக்குவளையில் தீக்குளித்து பெண் தற்கொலை

Published On 2021-01-16 10:11 GMT   |   Update On 2021-01-16 10:11 GMT
திருக்குவளையில் குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
வேளாங்கண்ணி:

நாகை மாவட்டம் திருக்குவளை போலீஸ் சரகம் வாழக்கரை மேல கட்டளை பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேல். இவருடைய மனைவி புவனேஸ்வரி (வயது 29). இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். சிங்காரவேல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதனால் மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி சம்பவத்தன்று வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனால் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயில் கருகி படுகாயம் அடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புவனேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் புவனேஸ்வரிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆவதால் நாகை உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News