செய்திகள்
கறம்பக்குடியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
கறம்பக்குடியில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:
கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கறம்பக்குடி உள் கடைவீதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதாக பசுபதி (வயது 50), முருகேசன் (54) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 17 கட்டு லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1,800 கைப்பற்றப்பட்டது.