செய்திகள்
விபத்து பலி

திருமயம் அருகே லாரி மோதி முதியவர் பலி

Published On 2021-01-04 09:42 IST   |   Update On 2021-01-04 09:42:00 IST
திருமயம் அருகே லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம்:

புதுக்கோட்டை மாவட்டம், புத்தாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகையன் (வயது 60). இவர், மனைவி மற்றும் குடும்பத்தினர் 2 பேருடன் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் காலை 4 மணி அளவில் காரில் வந்து கொண்டிருந்தார். திருமயம் அருகே உள்ள மலைகுடிபட்டி வளைவு அருகே வந்து கொண்டிருந்தபோது புதுக்கோட்டையிலிருந்து மதுரை நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில் காரை ஓட்டி வந்த முருகையன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News