செய்திகள்
கடலூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு சாலை விபத்தில் 302 பேர் பலி
கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்தில் 302 பேர் பலியாகி உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கூறினார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் அவரது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2019-ம் ஆண்டு ரவுடியிசம் தொடர்பாக 7 கொலைகள் நடந்தது. ஆனால் கடந்த ஆண்டு (2020) ரவுடியிசம் தொடர்பாக கொலைகள் ஏதும் நடக்கவில்லை. இருப்பினும் முன்விரோதம், கள்ளக்காதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 50 கொலைகள் நடந்துள்ளது. 910 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு 113 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 130 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக 77 பேர், குற்ற வழக்கில் தொடர்புடைய 15 பேர், சாராயம் கடத்திய 29 பேர், மணல் கடத்திய 9 பேரும் அடங்குவர்.
310 திருட்டு வழக்குகளில் 267 வழக்குகளில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளன. கடந்த 2019-ம் ஆண்டில் சாலை விபத்தில் 423 பேர் உயிரிழந்தனர். 2 ஆயிரத்து 815 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஆண்டு 302 பேர் சாலை விபத்தில் பலியானார்கள். 2 ஆயிரத்து 602 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது கடந்த 2019-ம் ஆண்டை விட குறைவாகும்.
2019 -ம் ஆண்டு 4 லட்சத்து 62 ஆயிரத்து 913 மோட்டார் வாகன வழக்குகளும், கடந்த ஆண்டு 4 லட்சத்து 19 ஆயிரத்து 969 மோட்டார் வாகன வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் ரூ.2 கோடியே 4 லட்சத்து 12 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 8 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது. இதில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது. சைபர் கிரைம் போலீசார் 7 வழக்குகளில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்ய உதவி செய்துள்ளனர். சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவிட்டதாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறியதாக 33 ஆயிரத்து 914 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 42 ஆயிரத்து 194 பேர் கைது செய்யப்பட்டனர். 8 லட்சத்து 28 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரத்து 959 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் அவரது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2019-ம் ஆண்டு ரவுடியிசம் தொடர்பாக 7 கொலைகள் நடந்தது. ஆனால் கடந்த ஆண்டு (2020) ரவுடியிசம் தொடர்பாக கொலைகள் ஏதும் நடக்கவில்லை. இருப்பினும் முன்விரோதம், கள்ளக்காதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 50 கொலைகள் நடந்துள்ளது. 910 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு 113 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 130 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக 77 பேர், குற்ற வழக்கில் தொடர்புடைய 15 பேர், சாராயம் கடத்திய 29 பேர், மணல் கடத்திய 9 பேரும் அடங்குவர்.
310 திருட்டு வழக்குகளில் 267 வழக்குகளில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளன. கடந்த 2019-ம் ஆண்டில் சாலை விபத்தில் 423 பேர் உயிரிழந்தனர். 2 ஆயிரத்து 815 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஆண்டு 302 பேர் சாலை விபத்தில் பலியானார்கள். 2 ஆயிரத்து 602 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது கடந்த 2019-ம் ஆண்டை விட குறைவாகும்.
2019 -ம் ஆண்டு 4 லட்சத்து 62 ஆயிரத்து 913 மோட்டார் வாகன வழக்குகளும், கடந்த ஆண்டு 4 லட்சத்து 19 ஆயிரத்து 969 மோட்டார் வாகன வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் ரூ.2 கோடியே 4 லட்சத்து 12 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 8 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது. இதில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது. சைபர் கிரைம் போலீசார் 7 வழக்குகளில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்ய உதவி செய்துள்ளனர். சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவிட்டதாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறியதாக 33 ஆயிரத்து 914 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 42 ஆயிரத்து 194 பேர் கைது செய்யப்பட்டனர். 8 லட்சத்து 28 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரத்து 959 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தெரிவித்தார்.