செய்திகள்
தற்கொலை

கெலமங்கலம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2021-01-03 09:03 IST   |   Update On 2021-01-03 09:03:00 IST
கெலமங்கலம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

கெலமங்கலம் அருகே உள்ள யூ.கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தப்பா. விவசாயி. இவருடைய மகன் அரிஷ் (வயது 22). வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அரிஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News